உண்மையே சொல்வோம் பொய்மை மறையட்டும்!
நன்மையே செய்வோம் தீமை மறையட்டும்!
BIS HALL MARK பதித்த உங்கள் தங்கத்தை ஆர் கோல்டு நிறுவனத்தில் விற்க நினைக்கும் போது கலவையில்லா தங்கம், கலவைத்தங்கம் மற்றும் கலவைத்தங்க ஆபரணத்தில் உள்ள தங்கத்தின் அளவை எத்தனை சதவிகிதம் (%) என்பதை கீழ்கண்ட அட்டவணையில் பூர்த்தி செய்து உங்களுடைய தங்கம் தற்போதைய 1 கிராம் என்ன விலைக்கு ஆர் கோல்டு நிறுவனத்தில் விற்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம். இந்த விலை அவ்வப்போது தேவையைப்பொறுத்தும் மார்க்கெட் ஏற்ற இரக்கத்தை பொருத்தும் மாற்றத்திற்குரியதாகும்.
HALL MARK முத்திரை இல்லாத நகைகளை அதில் தங்கத்தின் அளவு என்ன இருக்கிறது என்று பரிசோதனையில் தெரிந்தபின்னரே அது 1கி என்ன விலை என்பதை அட்டவணையில் பூர்த்தி செய்வது தெரிந்து கொள்ளலாம்.
உங்களது கலவையில்லாத் தங்கம் மற்றும் கலவைத்தங்கம், கலவை தங்க ஆபரணங்களின் சதவிகித அளவு கீழ்கண்டவாறு இருக்கலாம். அதற்க்கேற்ப விலை நிர்ணயம் இருக்கும்.
சதவிகித அடிப்படையில் | 1 கிராம் தங்கத்தின் தற்போதைய விலை |
99.99 % | ரூ. 9425 |
91.67 % | ரூ. 8641 |
87.50 % | ரூ. 8248 |
83.30 % | ரூ. 7852 |
75.00 % | ரூ. 7069 |
62.50 % | ரூ. 5891 |
1. வாடிக்கையாளர்கள், கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் நேரில் வந்து விற்கவிருக்கும் நகைகள் எந்தெந்த கடைகளில் வாங்கியது பற்றிய விபரங்களை சொல்ல வேண்டும். நம்பகத்தன்மை இருப்பதாக கருதினால், ஆர் கோல்டு கிளையின் நகை மதிப்பீட்டாளர் தங்கம் மற்றும் நகைகளின் தரத்தை பரிசோதித்து 99.99 கலவையில்லாத் தங்கத்தின் தற்போதைய மார்க்கெட் விலையில் தங்கம் மற்றும் நகைகளின் தரத்தை ஒப்பிட்டு சரியான விலையை 1 கிராம் எவ்வளவு விலைக்கு பெற்றுக்கொள்ளப்படும் என்பதை தெளிவுபடுத்துவார். அந்த விலை சரியானதா என தீர்மானித்து சம்மதம் தெரிவித்த பின்னரே தங்கம் நகைகள் வாங்கப்படும். தீர்மானிக்கப்படும் விலைக்கே விற்க சம்மதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வேறு இடங்களில் சோதித்து பார்த்து ஆர் கோலடில் மதிப்பிட்டு விலை வேறு எங்கும் கிடைக்கவில்லை என்ற பட்சமே ஆர் கோல்டில் விற்கலாம். அதேபோல் வாடிக்கையாளர்களிடம் தங்கம் நகைகள் நம்பகத்தன்மையிருந்தால் மட்டுமே வாங்கப்படும்.
2. கணவன் மனைவி ஆகியோர் நிறுவனம் கேட்கும் தங்களது முகவரிச் சான்றுகளை காண்பிக்க தவறக்கூடாது. மேலும் வங்கி கணக்கு பற்றிய எண்: IFSC CODE NO வைத்திருக்கவேண்டும். பணியில் இருந்தால், அதற்கு ஆதாரமாக ID காண்பிக்கவேண்டும். தொழில் செய்து வந்தால், அது சம்பந்தமாக GST ஆதாரமாக காண்பிக்கவேண்டும்.
3. கணவன் மனைவி அல்லது தாய் தந்தையாருடன் மகன் அல்லது மகள் போன்ற குடும்பநபர்கள் எவரேனும் ஒருவருடன் வந்து மட்டுமே ஆர் கோல்டு நிறுவனத்தில் தங்கம் நகைகள் விற்கமுடியும். மூன்றாம் நபர்கள் யாரேனும் உடனிருப்பின் அல்லது நம்பகத்தன்மையான விபரங்கள் இல்லையெனில் ஆர் கோல்டு நிர்வாகம் வாங்குவதை மறுத்துவிடும்.
4. தனியாக வரும் நபர் தனது பெயரில் தங்கம் நகை வாங்கப்பட்டதற்கான ஆதாரத்தை (Bill) வைத்திருக்கவேண்டும். அல்லது பணிபுரிவகித்தற்கான 1D வைத்திருக்கவேண்டும் அல்லது தொழில் செய்வதற்கான GST இருக்க வேண்டும் வெளிநாடுகளில் வாங்கியிருந்தால் பாஸ்போர்ட் கட்ட வேண்டும்.
5. நம்பகத்தன்மையில்லாத தங்கம் நகைகளை பற்றிய விவங்களை சரியாக கூறமுடியாத நபர்கள் சந்தேகத்திற்கு இடமளித்து விசாரிக்கும் போது திருட்டு பொருளாக இருக்கின்றது என தெரியவந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைப்போம்.
6. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை பணமாக பெறலாம். குறிப்பிட்ட (Cash Limit) தொகைக்கு மேல் தங்கள் வங்கிக்கணக்கில் RTGS மூலம் பெறலாம்.
தங்கம் கடந்து வந்த பாதையில் 22 CT, KDM , 916 KDM , 88 KDM , 85 KDM, 22 / 20 ,18 CT போன்ற முத்திரைகளை நகைகள் மீது தயாரிப்பாளரும் விற்பனை செய்வோரும் பதித்து விற்றதில் பெறும் முறைகேடு நடந்து வாடிக்கையாளர் மற்றும் பழைய நகை வியாபாரிகள் பெரும் நஷ்டமடையவே காரணமாக இருந்திருப்பதை அறிந்த மத்திய அரசு BIS HALL Mark முத்திரையை தங்கம் நகைகளில் பதித்து விற்க வேண்டும் என்ற உத்தரவிற்க்கு பின் தரம் பற்றியும் மதிப்பு பற்றியும் தங்க வாடிக்கையாளர்களுக்கு இருந்து வந்த கவலை தீர்ந்தது. தங்கத்தின் மீது நம்பிக்கை உயர்ந்துள்ளது.
மேலும் முழுமையாக BIS HALL MARK அமல்படுத்தும்போது யாருக்கும் நஷ்டம் என்பதே இருக்காது தங்கத்தின் இறக்குமதியும் குறையும்
இருப்பினும் தங்கம் விலை உயர உயர திருட்டு உயர்த்து வந்து கொண்டிருக்கிறது. திருடர்களுக்கு சாதகமாக வெளிமாநிலங்களில் இருந்து வந்த அடகு நிறுவனகள் ஏதோ ஒரு முகவரி சான்றிதழ் மட்டுமே பெற்றுக் கொண்டு நகைகடன் வழங்கி வருகின்றன. தவறான முகவரியை பெற்று ஏலம் விட அனுப்பும் நோட்டிஸ் டெலிவரி ஆகாமல் திரும்பி வரும் அந்த நபர்களைப் பற்றி மறைத்தும் ஏலம் விட்டுவிட்டது போல நகைகளை தாங்களே எடுத்து விற்று விடுவதுமே திருட்டு அதிகமாக காரணமாக இருக்கிறது. திருட்டு நகைகளை அடகு வைக்கவோ, விற்கவோ முயலும் நபரை அருகிலுள்ள காவல் துறையிடம் ஒப்படைப்பதே நேர்மையான தொழில் செய்வதற்கு ஆதாரமாகும். தவிர தவறான நபரிடம் அடகு வாங்கி விட்டு அதுதெரிந்தபின் அடகு நிறுவனங்கள் நைசாக அதிலிருந்து தப்பிக்க பழைய பொருளை அவருக்கு கொடுத்து அந்த வியாபாரி தலையில் கட்டி விடுவதும் நடந்துவருகின்றது. எனவே தான் ஆர்-கோல்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தரத்தில் கவனமாக இருக்கவும், திருட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் லாப நோக்கமின்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆர்-கோல்ட் நிறுவனம் நம்பகத் தன்மையில்லாத நபர்களிடம் வியாபார தொடர்புவைத்துக் கொள்ளாது. மேலும் அடகு வியாபாரிகளிடம் , தங்கம் நகைகள் வாங்கி விற்கும் வியாபாரிகளிடமிருந்தும் வாங்குவதில்லை நேரில் வரும் நம்பகத்தன்மையுள்ள வாடிக்கையாளர்களிடம் மட்டுமே வாங்கப்படும். இருப்பிடத்திற்கே சென்று வாங்குவதில்லை முறைப்படி வாடிக்கையாளர்கள் ஆர்-கோல்ட் நிறுவனத்தில் வந்து மட்டுமே விற்கவேண்டும்.
R-GOLD விலை நிர்ணயம் கலவையில்லாத் தங்கத்தின் அதாவது 24K (99.99)ன் அவ்வப்போதுள்ள மார்க்கெட் விலையிலிருந்து கலவையில்லா மற்றும் கலவைத்தங்கத்தின் சதவிகித அடிப்படையில் சரியான உண்மையான விலையை வடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது.
We care for you
Get your Jewelry tested with our In use max sell gold purity analyzer, Incorporated with the latest technology from "USA" that ensures speed, accurate and reliable results to get the best value for your gold.
Client Satisfaction and best customer service is our motto. Being a client-centric organization, our foremost objective is to deliver 100% satisfaction to esteemed clients. By offering them the best services in just few minutes, we save their time. By making free valuation of their gold assets and providing them the best prices, we have become a chosen name. R-gold has branches in Chennai, Salem, Karur, Tirupur, Krishnagiri , Udumalpet, Mettupalayam, Madurai, Hosur, Nagarkoil and Erode you can sell your gold in nearest branch for best prize.
Get complete information about the gold rate in R-Gold Exchange. If you want to sell gold. Please Contact Us.